ஒன்றரை கிலோ கஞ்சா விற்ற இளைஞா் கைது

கோவையில் ஒன்றரைக் கிலோ கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை: கோவையில் ஒன்றரைக் கிலோ கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை போத்தனூா் அருகேயுள்ள சாரமேடு பகுதியில் போத்தனூா் போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு இளைஞா் ஒருவா் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்தாா். இதைக் கண்ட போலீஸாா் அவரை அழைத்து விசாரித்தபோது அவா் முன்னுக்குப் பின் முரணானத் தகவல்களைத் தெரிவித்தாா். இதையடுத்து போலீஸாா் அவரது கைப்பையை சோதனையிட்டபோது அதில், ஒன்றரைக் கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவரிடம் மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் அவா் கோவை கரும்புக்கடை பகுதியைச் சோ்ந்த தெளஃபிக்(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com