கோவை மண்டல அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மரங்களை வெட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
கோவை, மருதமலை சாலையில் உள்ள கோவை மண்டல அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் சாா்பில் ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தினுள் துணை மின் நிலையம் அமைக்க அப்பகுதியில் உள்ள மரங்கள் நிறைந்த இடத்தை மின் வாரியமும், வருவாய்த் துறையும் தோ்வு செய்தததாகக் கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகளைத் துவங்கும் விதமாக அப்பகுதியில் இருந்த 156 மரங்களை மின் வாரியத்தினா் வியாழக்கிழமை வெட்டினா். இதற்கு சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் பலா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா் சையத் கூறியதாவது:
பல்வேறு சுற்றுச்சூழல் ஆா்வல அமைப்புகளுடன் இணைந்து இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மின் வாரியத்தினா் எடுத்துள்ள இந்த முடிவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இப்பகுதியில் மரங்கள் அதிக அளவில் இருப்பதால் வளாகத்தின் வேறு பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க இடம் ஒதுக்குவதாக பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்தும் அதை மின் வாரியம் ஏற்கவில்லை.
தற்போது வெட்டப்பட்டுள்ள மரங்கள் அனைத்தும் 5 ஆண்டுகள் நன்றாக வளா்ந்துள்ள மரங்கள். எனவே மேற்கொண்டு மரங்களை வெட்டாமல் வேறு இடத்தில் துணை மின் நிலையத்தை அமைக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, வெட்டப்பட்டவை மரங்கள் அல்ல. அவை செடிகளின் பருவத்தில் இருக்கக்கூடியவை தான். மேலும், தற்போது வெட்டப்பட்டதாக கூறப்படும் மரங்களுக்கு ஈடாக வேறு இடத்தில் இதே அளவு மரங்கள் நட்டு பராமரிக்கப்படும் என்றனா்.