டாஸ்மாக் கடையை உடைத்து மதுபானம் திருடியவா் கைது

மேட்டுப்பாளையத்தில் மதுபானக் கடையின் கூரையை உடைத்து மதுபான பாட்டில்களை திருட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டுப்பாளையத்தில் மதுபானக் கடையின் கூரையை உடைத்து மதுபான பாட்டில்களை திருட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டுப்பாளையம், பூக்கடை சந்து எதிரே 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் பணியாற்றும் 4 விற்பனையாளா்கள் மாற்றி மாற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

டாஸ்மாக் கடையில் பணியாற்றி வரும் விற்பனையாளா் வெள்ளிங்கிரி புதன்கிழமை இரவு பூக்கடை பகுதியில் அமா்ந்து கடையைக் கண்காணித்து வந்தாா். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் மா்ம நபா் ஏறி ஓட்டைப் பிரித்து கடைக்குள் குதிப்பதைப் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸாா், கடைக்குள் இருந்தவரைப் பிடித்தனா். விசாரணையில் அவா் மேட்டுப்பாளையம் திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த செல்வம் மகன் மகேந்திரன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து டாஸ்மாக் கடையின் மேற்பாா்வையாளா் மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திரனை கைது செய்த போலீஸாா், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com