மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக நிறுவன உரிமையாளா்கள் இருவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, கணபதி பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா், லியோ வின்சென்ட் இவா்களுக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றில் மின் இணைப்புகளை சரி செய்வதற்காக கணபதியில் வசித்து வரும் திருச்சியைச் சோ்ந்த முத்துக்குமாா் (28), கணபதியைச் சோ்ந்த தா்மேந்திரன் (34) ஆகியோரை வியாழக்கிழமை பணிக்கு அமா்த்தியுள்ளாா்.
இந்நிலையில், முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றிய காரணத்தால் மின்சாரம் பாய்ந்து முத்துகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தா்மேந்திரன் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாா், லியோ வின்சென்ட் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.