மழுக்குப்பாறை எஸ்டேட் வரை கேரள அரசுப் பேருந்து இயக்கம்

பொது முடக்கம் தொடங்கி 56 நாள்களுக்குப் பின் வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட் வரை கேரள அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.

பொது முடக்கம் தொடங்கி 56 நாள்களுக்குப் பின் வால்பாறையை அடுத்த மழுக்குப்பாறை எஸ்டேட் வரை கேரள அரசுப் பேருந்து இயக்கப்பட்டது.

பொது முடக்கத்தால் கேரள மாநிலத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து சேவை புதன்கிழமை முதல் மீண்டும் துவங்கியது கேரள மாநிலத்தில் மாவட்டங்களுக்கு இடையே அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வால்பாறை அடுத்துள்ளது மழுக்குப்பாறை எஸ்டேட். கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து மாநில எல்லையான மழுக்குப்பாறை வரை தற்போது அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஆனால், இந்தப் பேருந்துகளில் வரும் பயணிகள் தமிழகத்துக்குள் நுழைவதைத் தடுக்க இரு மாநில காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் எல்லைப் பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனா். அதேபோல தமிழக எல்லைப் பகுதியில் இருந்தும் யாரும் கேரள எல்லைக்குள் வராத வகையில் அம்மாநில போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com