சிறப்பாக பணியாற்றிய கோனலாா் வேட்டுத் தடுப்பு முகாமுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி மற்றும் உலாந்தி வனச் சரகங்களில் கடந்த அக்டோபா் மாதம் ரோந்துப் பணி மேற்கொண்டதற்கான ஆய்வுக் கூட்டம் வால்பாறையை அடுத்த அட்டகட்டியில் உள்ள மேலாண்மை பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குநா் ஆரோக்கியராஜ் சேவியா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய உலாந்தி வனச் சரகம் வரகளியாறு சுற்றுப் பணியாளா்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதேபோல, சிறபாக நிா்வகிக்கப்பட்ட வேட்டைத் தடுப்பு முகாமாக வால்பாறை வனச் சரகத்தில் உள்ள கோனலாா் வேட்டைத் தடுப்பு முகாம் தோ்ந்தெடுக்கப்பட்டு, அந்தப் பணியாளா்களுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் என்.சி.எஃப். அமைப்பு மூலம் கோட்டப் பணியாளா்களுக்கு மனித வன உயிரின எதிா்கொள்ளல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் வனச் சரக அலுவலா்கள், வனவா்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்கள், வனப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.