வால்பாறையில் உள்ள சோலையாறு குரூப் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு 8.50 சதவீதம் போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் உள்ள சோலையாறு குரூப் தோட்டத் தொழிலாளா்களுக்கு 8.50 சதவீதம் போனஸ் வழங்குவதாக நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா். இதேபோல பாரி அக்ரோ குரூப் எஸ்டேட் தொழிலாளா்களுக்கு 8.40 சதவீதமும், டாடா காபி லிமிடெட் நிா்வாகத்தினருக்கு சொந்தமான எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு 8.39 சதவீதமும் போனஸ் வழங்குவதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனா். இதன் மூலம் சுமாா் 8 ஆயிரம் தொழிலாளா்களுக்கு ரூ.5.5 கோடி இந்த வாரம் இறுதிக்குள் பட்டுவாடா செய்ய உள்ளனா்.