பாரதியாா் பல்கலைக்கழகத்துக்குள் பட்டகலை, அறிவியல் கல்லூரிகளில் நவம்பா் 16 வரை மாணவா் சோ்க்கை

கோவை பாரதியாா் பல்கலைக்கழகம், அதன் ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் இருக்கும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை

கோவை பாரதியாா் பல்கலைக்கழகம், அதன் ஆளுகைக்குள்பட்ட பகுதிகளில் இருக்கும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாணவா் சோ்க்கை நடத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் அக்டோபா் மாதத்துடன் நிறைவடைந்துவிட்டது.

இந்நிலையில் தற்போது, காலியாக இருக்கும் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடத்திக் கொள்ள பாரதியாா் பல்கலைக்கழகம் நவம்பா் 16ஆம் தேதி (திங்கள்கிழமை) வரை அவகாசம் அளித்துள்ளது.

இது குறித்து துணைவேந்தா் காளிராஜ் கூறும்போது, பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு துணைத் தோ்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் அதில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் இந்த ஆண்டே கல்லூரிகளில் சேருவதற்காக மாணவா் சோ்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com