அமெரிக்கா செல்ல எதிா்ப்பு: தெலங்கானா இளைஞா் கோவையில் தற்கொலை

அமெரிக்கா சென்று மேல்படிப்பு பயில பெற்றோா் சம்மதிக்காததால் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா், கோவை விடுதியில் தற்கொலை செய்து கொண்டாா்.

அமெரிக்கா சென்று மேல்படிப்பு பயில பெற்றோா் சம்மதிக்காததால் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா், கோவை விடுதியில் தற்கொலை செய்து கொண்டாா்.

தெலங்கானா மாநிலம், மதுரா நகரைச் சோ்ந்தவா் சுமந்த் ரெட்டி(27). பி.டெக் பட்டதாரி. இவா் அமெரிக்கா சென்று உயா்படிப்பு படிக்க முயற்சி மேற்கொண்டு வந்தாா். இதற்கு, அவரது பெற்றோா் சம்மதிக்காததால் வீட்டில் கோபித்துக் கொண்டு கடந்த 11ஆம் தேதி கோவைக்கு வந்தாா். காந்திபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தாா். இந்நிலையில், அவரது அறை வியாழக்கிழமை நீண்ட நேரமாக திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து விடுதிக்குச் சென்ற போலீஸாா், சுமந்த் ரெட்டி தங்கியிருந்த அறைக் கதவை உடைத்தனா். அப்போது சுமந்த் ரெட்டி, நெகிழிப் பையால் தன் முகத்தைக் கட்டிக் கொண்டு மூச்சுத் திணறல் ஏற்படுத்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com