ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரிக்கை

கோவை மாநகராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மாவட்டத் தலைவா் ஆா்.தாமோதரன் மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கும் , வாகன ஓட்டுநா்களுக்கும் 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கக் கோரி எங்கள் சங்கத்தின் சாா்பாக மனு அளித்தோம். தாங்கள் அதை பரிசீலனை செய்வதாகத் தெரிவித்தீா்கள். ஆனால் தற்போது, தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.2,500 மட்டுமே போனஸாக வழங்கப்பட்டுள்ளது. கரோனா பேரிடா் காலத்தில் தங்களின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் பணிகள் மேற்கொண்ட பணியாளா்களுக்கு குறைந்த பட்ச போனஸ் கூட வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இதுகுறித்து மீண்டும் பரிசீலனை செய்து, மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களுக்கு உடனடியாக 20 சதவீதம் போனஸ் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com