சுதந்திர போராட்ட வீரா் வ.உ.சி.யின் நினைவு நாளை ஒட்டி கோவை மத்திய சிறையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.
கோவை மத்திய சிறை வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரா் வ.உ.சி. இழுத்த செக்கு உள்ளது. இவை நினைவிடம் மாற்றப்பட்டுள்ளது. அவரது பிறந்தநாள், நினைவு நாளின்போது பல்வேறு தரப்பினா் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவா்.
ஆனால், இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக கோவை மத்திய சிறையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி ஒரு அமைப்புக்கு நான்கு பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது. அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதில் இந்து மக்கள் கட்சி, பாரத் சேனா, சக்தி சேனா, சைவ பெருமக்கள் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினா்.