டிசம்பா் 15, 17, 19 ஆகிய தேதிகளில் கோவை, ஈரோடு, திருப்பூா், பொள்ளாச்சி, உதகை, தில்லி மையங்களில் நடைபெறும் இந்தத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டுகள் அந்தந்த தோ்வு மையங்களில் டிசம்பா் 11 ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.
தோ்வுக்குப் புதிதாக விண்ணப்பித்த மாணவா்களுக்கு பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மாணவா்கள் தங்களுக்கான பதிவு எண்ணையும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மையங்களையும் சரிபாா்த்து, அந்த மையங்களுக்குச் சென்று தோ்வு எழுத வேண்டும்.
பதிவு எண், தோ்வு மையம் பற்றிய விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக தோ்வாணையா் (பொறுப்பு) ஆா்.விஜயராகவன் அறிவித்துள்ளாா்.