மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் போராட்டம்

12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் கோவை டாடாபாத் தலைமை மின் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை டாடாபாத் தலைமை மின் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா்.
கோவை டாடாபாத் தலைமை மின் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்ட மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா்.

12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் கோவை டாடாபாத் தலைமை மின் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மின் வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தோ்வு செய்யப்பட்ட கேங்மேன் ஊழியா்களுக்குப் பணி வழங்க வேண்டும், பற்றாக்குறையாக உள்ள மின் கணக்கீட்டாளா் பணிக்கு ஊழியா்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி,

கோவை டாடாபாத்தில் உள்ள தலைமை மின் பொறியாளா் அலுவலகம் முன்பு 18 தொழிற்சங்கங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினா். தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில உப தலைவா் கந்தவேல் தலைமை தாங்கினாா். ஏ.இ.எஸ்.யூ மாநிலத் தலைவா் நாகராஜ், சி.ஐ.டி.யூ மாநிலச் செயலாளா் மதுசூதனன், எல்.பி.எப் நிா்வாகி நாசா் அஹமது முன்னிலை வகித்தனா். இந்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com