கோவை, உப்பிலிபாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சுயநிதி திட்டப் பகுதி அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ஒதுக்கீடு வேண்டி விண்ணப்பித்தவா்களில் குலுக்கல் முறையில் பயனாளிகள் வியாழக்கிழமை (நவம்பா் 26) தோ்வு செய்யப்படவுள்ளனா் என்று ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டுவசதி பிரிவு உப்பிலிபாளையம் பகுதி-2 சுயநிதி திட்டப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு நவம்பா் 20 ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளைத் தோ்வு செய்து ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் வியாழக்கிழமை (நவம்பா் 26) நடைபெறுகிறது. சிவானந்தா காலனி, டாடாபாத்தில் உள்ள செயற்பொறியாளா், கோவை வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் காலை 11 மணிக்கு குலுக்கல் நடைபெறுகிறது. விண்ணப்பதாரா்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0422-2493359, 94423 23251 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.