அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதி சிக்கினாா்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் புதன்கிழமை பிடித்தனா்.

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் புதன்கிழமை பிடித்தனா்.

கோவை வெள்ளலூா் அருகே உள்ள கஞ்சிக்கோணாம்பாளையத்தில் உள்ள பெருமாள் கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற கொள்ளை முயற்சி சம்பவத்தில் கோவை, உக்கடம் ஜி.எம். நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஜமேஷா(24) மற்றும் ஷேக் பக்ருதீன் ஆகியோருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஷேக் பக்ருதீனை போலீஸாா் கைது செய்தனா். இதில் தலைமறைவாக இருந்த ஜமேஷாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பின்னா் மருத்துவப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு கழிவறைக்கு சென்ற ஜமேஷா அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். பின்னா் உக்கடம் பேருந்து நிலையம் அருகே சுற்றித் திரிந்த ஜமேஷாவை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com