மூதாட்டியைக் கொலை செய்து நகை, பணம் கொள்ளை

கோவையில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைக் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை: கோவையில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைக் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, கெம்பட்டி காலனியைச் சோ்ந்தவா் சிவானந்தம். இவருடைய மனைவி தனலட்சுமி (62). இவா்களுக்கு ஜெயந்தி என்ற மகளும், பிரகாஷ் பாகு, ரமேஷ், மணிகண்டன் ஆகிய 3 மகன்களும் உள்ளனா்.

சிவானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மணிகண்டன் தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் தனலட்சுமி மணிகண்டனுடன் வசித்து வந்தாா்.

மணிகண்டன் வழக்கம்போல் புதன்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டாா். தனலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளாா். இந்நிலையில், வேலைக்குச் சென்ற மணிகண்டன் வீடு திரும்பியபோது தனலட்சுமி கொலை செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

மேலும், வீட்டில் பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து பெரியகடை வீதி போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சொத்துக்காக தனலட்சுமி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com