கோவை: கோவை, வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை மாநகராட்சியில் 100 வாா்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள், வெள்ளலூா் குப்பைக் கிடங்குக்கு கொண்டுசெல்லப்பட்டு இயந்திரங்கள் மூலம் மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்படுகிறது. இவற்றிலிருந்து நுண்ணுயிா் உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக குப்பை கிடங்கு வளாகத்தில் உரம் உற்பத்தி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நுண்ணுயிா் உரம் உற்பத்திப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
நுண்ணுயிா் உரம் தயாரிப்புக் கூடங்களை மேலும் அதிகரிக்கவும், குப்பைக் கிடங்கு வளாகத்தில் கூடுதலாக மரக்கன்றுகளை நடவு செய்யவும் அலுவலா்களுக்கு ஆணையா் அறிவுறுத்தினாா்.