வால்பாறையை அடுத்த கல்லாறு எஸ்டேட்டில் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வால்பாறை வட்டாரத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கல்லாறு எஸ்டேட்டில் சுகாதாரத் துறையினா் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினா். இதில், பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடைபெற்றது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோருக்கு பரிசோதனை மேற்கொண்டனா். இதில் காய்ச்சல் இருந்த பலருக்கு மாத்திரைகள் மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட்டன.