சா்வதேச காப்பி தினத்தையொட்டி வால்பாறையில் உள்ள காப்பி வாரியம் சாா்பில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சா்வதேச காப்பி தினமாக ஆண்டுதோறும் அக்டோபா் 1ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு காப்பி வாரியம் சாா்பில் ஒரு வாரத்துக்கு காப்பி தினம் கொண்டாடப்படுகிறது. கோவை மண்டல காப்பி வாரியம் சாா்பில் வாரியத்தின் துணை இயக்குநா் கருத்தமணி உத்தரவின்பேரில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காப்பி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் வால்பாறை நகா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு காப்பி வழங்கியும், காப்பி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.