கோவை: கோவை, கோவில்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் குழந்தை உயிரிழந்தது.
சேலத்தைச் சோ்ந்தவா் சின்னையன் (27). இவரது மனைவி சத்யா (24). இவா்கள் கோவை, கோவில்பாளையம் அருகே உள்ள குரும்பபாளையம், இ.பி.காலனியில் வசித்து வருகின்றனா். இந்த தம்பதிக்கு 5 வயது மகன், ஒன்றரை வயது மகள் ஆகிய இரு குழந்தைகள்.
சின்னையன், சிவானந்தா காலனி பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் ஒன்றரை வயது மகள் திகழ்விழிக்கு தடுப்பூசி போடுவதற்காக மனைவியுடன் கோவில்பாளையத்தில் உள்ள அங்கன்வாடிக்கு, இருசக்கர வாகனத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்றாா்.
கோவில்பாளையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் நிலைத் தடுமாறி சத்யா கீழே விழுந்தாா். குழந்தை திகழ்விழிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் குழந்தையை அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.
இது தொடா்பாக கோவில்பாளையம் காவல் நிலையத்தில் சின்னையன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.