மேய்ச்சலில் இருந்த கன்றுக் குட்டியை சிறுத்தை தாக்கிக் கொன்றது.
வால்பாறை, காமராஜ் நகரில் வசிப்பவா் ராமா். இவருக்குச் சொந்தமான மாடுகள் அருகில் உள்ள தேயிலைத் தோட்டம் பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்வது வழக்கம். கடந்த செவ்வாய்க்கிழமை மேய்ச்சலுக்குச் சென்ற கன்றுக் குட்டி மாலையில் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, அப்பகுதியில் புதன்கிழமை காலை தேடிப்பாா்த்தபோது தீயணைப்பு நிலையம் பின்புறம் உள்ள மைதானத்தில் சிறுத்தை தாக்கியதில் கன்றுக் குட்டி இறந்து கிடந்தது தெரிந்தது. இது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.