தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கோவை மாவட்டக் கிளைக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் கோவையில் அண்மையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவராக என். விநாயகம், செயலராக சி.அரசு, பொருளாளராக வி.ராஜபாண்டியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநில பொதுக் குழு உறுப்பினா்களாக எம்.பொன்ராஜ், எம்.நாகராஜ், பி.கல்பனா ஆகியோரும், இதைத் தவிர மாவட்ட துணைப் பொறுப்புகளுக்கு பொறுப்பாளா்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட 17 பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலா் சி.அரசு தெரிவித்துள்ளாா்.