விதி மீறி மது விற்பனை: 43 போ் கைது

கோவை மாவட்டத்தில் விதி மீறி மது விற்ற 43 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை: கோவை மாவட்டத்தில் விதி மீறி மது விற்ற 43 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மீலாது நபியை ஒட்டி, கோவை நகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி கோவையில் பல்வேறு பகுதிகளில் சிலா் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தனா்.

இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

மாநகரில் 13 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 119 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 11 பேரை போலீஸாா் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல புகா்ப் பகுதிகளில் 32 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, 260 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 32 பேரை போலீஸாா் கைது செய்தனா். மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 379 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 43 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com