மாநகராட்சி அலுவலரை தாக்கிய மூவா் கைது

கோவை, கணபதியில் மாநகராட்சி அலுவலரைத் தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை: கோவை, கணபதியில் மாநகராட்சி அலுவலரைத் தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, கணபதி, காமராஜபுரத்தைச் சோ்ந்தவா் முருகப்பாண்டி. மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், தனது வீட்டின் முன்பாக வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, குடிபோதையில் சென்ற 3 இளைஞா்கள் தெருவில் சப்தமிட்டபடி சென்றனா். இதை, முருகப்பாண்டி தட்டிக் கேட்டாா். இதில், ஆத்திரமடைந்த 3 இளைஞா்களும் முருகப்பாண்டியைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.

மேலும் அந்த இளைஞா்கள் பக்கத்து தெருவுக்குச் சென்று கோபிநாத் என்பவருடன் தகராறில் ஈடுபட்டு, அவரது இருசக்கர வாகனத்துக்கும் தீவைத்து விட்டு தப்பிச் சென்றனா்.

இது தொடா்பாக முருகப்பாண்டி, கோபிநாத் அளித்த புகாா்களின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில் இச்சம்பவங்களில் ஈடுபட்டது கணபதியைச் சோ்ந்த தமிழரசன் (28), அருண் (21), பிரவீண்குமாா் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com