ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயன்முறை மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட இயன்முறை மருத்துவா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
உலக இயன்முறை சிகிச்சை தினத்தையொட்டி, கோவை இயன்முறை மருத்துவா்கள் சங்கம் சாா்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பாகப் பணியாற்றி வரும் இயன்முறை மருத்துவா்கள், இயன்முறை சிகிச்சைக்கு பல வழிகளில் உதவி செய்பவா்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இதில் அச்சங்கத்தின் தலைவா் ராஜா செல்வகுமாா் பேசிதயதாவது:
கரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரலை வலிமைப்படுத்த இயன்முறை சிகிச்சை முறை உதவுகிறது. தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இயன்முறை மருத்துவா்களை நியமிக்க வேண்டும். தொகுப்பு ஊதியம் அடிப்படையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நியமிக்கப்பட்ட இயன்முறை மருத்துவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றாா்.