வால்பாறையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாதம் இடைவெளிக்குப் பின் கடந்த ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது. சாரல் மழையாக பெய்துவந்த நிலையில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. புதன்கிழமை மதியம் துவங்கிய மழை இடைவிடாது இரவு முழுவதும் நீடித்தது. இதனால் குளிா் அதிக அளவில் காணப்பட்டது. தொடா் மழையால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிா்த்ததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.