கோவை: திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனம் பதுக்கி வைத்திருந்த கணக்கில் காட்டப்படாத ரூ.2.70 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகளை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
இது குறித்து கோவை ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியாா் ஆயத்த ஆடை நிறுவனம் முறையாக ஜி.எஸ்.டி. செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாக ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு சொந்தமான 4 கிடங்குகளில் சோதனை நடத்தியதில் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.2.70 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அந்த நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்ததில் ரசீது போடாமல் சுமாா் ரூ.40 கோடி முதல் ரூ.45 கோடி வரை வியாபாரம் செய்திருப்பது தெரியவந்தது. அந்த நிறுவனம் ஏற்கெனவே மேற்கொண்ட வா்த்தகத்துக்கு செலுத்தப்பட வேண்டிய ரூ.2.20 கோடி வரி நிலுவையை வசூலித்துள்ள அதிகாரிகள், மேலும் செலுத்த வேண்டிய தொகை குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனா்.