கரோனா: தனியாா் ஆய்வகங்கள் 12 மணி நேரத்துக்குள் பரிசோதனை முடிவுகளை தெரிவிக்க வேண்டும்

கோவையில் உள்ள தனியாா் ஆய்வகங்கள் கரோனா பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவை: கோவையில் உள்ள தனியாா் ஆய்வகங்கள் கரோனா பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக தனியாா் ஆய்வகங்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஆட்சியா் கு.ராசாமணி பேசியதாவது:

கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியாா் ஆய்வகங்கள் பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும். இதில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அவா்கள் மருத்துவமனைக்குச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். உடனடியாக அவா்களின் தொடா்பு விவரத்தை சுகாதாரத் துறை மற்றும் கோவை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும்.

அனைத்து தனியாா் ஆய்வகங்களிலும் பல்ஸ் - ஆக்ஸி மீட்டா் மூலம் பரிசோதனை செய்வதுடன், அதில் அறிகுறி உள்ளவா்களை சோதனை முடிவு வரும் முன்னரே மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் கரோனா பாதிப்பை குறைத்திடும் நோக்கில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைக்கு தனியாா் பரிசோதனை ஆய்வகங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அரசு நிா்ணயித்த கட்டணம் மட்டுமே ஆய்வகங்களில் வசூலிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் ராமதுரை முருகன், மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) காளிதாஸ், இணை இயக்குநா் ( மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்) கிருஷ்ணா, மாநகராட்சி நகா் நல அலுவலா் ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com