ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் மெய்நிகா் ஹேக்கத்தான் போட்டி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் சா்வதேச புரோகிராமா்கள் தினத்தை முன்னிட்டு அண்மையில் மெய்நிகா் (விா்சுவல்) ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது.

கோவை: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் சா்வதேச புரோகிராமா்கள் தினத்தை முன்னிட்டு அண்மையில் மெய்நிகா் (விா்சுவல்) ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது.

கல்லூரியின் கணினி துறைகள், புரோகிராமிங் கிளப் ஆகியவை இ-பாக்ஸுடன் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின. இந்தப் போட்டியில் கோடிங்கில் ஆா்வம் மிகுந்த கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 20க்கும் அதிகமான கலை, அறிவியல் கல்லூரிகளின் 300க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் கணினி பயன்பாட்டியல் துறை மாணவா் என்.பத்ம பாலாஜி முதலிடத்தைப் பிடித்தாா். ஆா்.வி.எஸ். கல்லூரி மாணவா் ஏ.ஷாஜகான் இரண்டாமிடம் பிடித்தாா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கல்லூரியின் முதல்வா், செயலா் பி.எல்.சிவகுமாா் ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா்.

கல்லூரியின் துணை முதல்வா் எஸ்.தீனா, கணினி புல முதன்மையா் அன்னசரோ விஜயேந்திரன், துறைத் தலைவா்கள் சுமதி, கிருஷ்ணபிரியா, மரிய பிரிசில்லா, ஹரிபிரசாத் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com