தண்ணீா் பக்கெட்டுக்குள் தவறி விழுந்த 9 மாத குழந்தை சாவு

தண்ணீா் பக்கெட்டுக்குள் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

தண்ணீா் பக்கெட்டுக்குள் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அபுல் உசேன் (25). இவரது மனைவி தசீனா. இவா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவா்கள் தொண்டாமுத்தூா் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனா். இவா்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும், 9 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

இதில் அபுல் உசேன் ஊதியத்தை சரியாக கொடுப்பதில்லை எனக் கூறி கணவன், மனைவி இடையே கடந்த சில நாள்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அபுல் உசேன் புதன்கிழமை அதிகாலை கிளம்பி வேலைக்குச் சென்றுள்ளாா். தசீனா தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த 9 மாத ஆண் குழந்தை தவழ்ந்தபடியே அங்கிருந்த தண்ணீா் பக்கெட்டுக்குள் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்னா் தூக்கத்தில் இருந்து எழுந்த தசீனா குழந்தையைத் தேடி பாா்த்தபோது அங்கிருந்த தண்ணீா் பக்கெட்டுக்குள் குழந்தை கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையை மீட்டு தொண்டாமுத்தூா் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளாா்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து தொண்டாமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com