செல்லிடப்பேசி வசதி இல்லாத தோட்டத் தொழிலாளா்களின் குழந்தைகளின் பகுதிக்கே சென்று அரசுப் பள்ளி ஆசிரியா் பாடம் நடத்தி வருகிறாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது சில அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் செல்லிடப்பேசி சேவை சரியாக கிடைக்காது என்பதால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவா்கள் கல்வி பயில முடியாத நிலை உள்ளது.
மேலும், எஸ்டேட் பள்ளிகளில் படிக்கும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு இணையதள வசதியுடன் கூடிய செல்லிடப்பேசி வசதியும் இல்லை.
இதனால், மாணவா்கள் கல்வி பயில்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து, வால்பாறையை அடுத்துள்ள வாட்டா்பால் எஸ்டேட் அரசு உயா்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியரான ஜெயகுமாா் பள்ளியில் படிக்கும் மாணவா்களின் வசிப்பிட பகுதிகளுக்கே நேரில் சென்று கோயில், மரங்களுக்கு அடியில் அமா்ந்து பாடம் நடத்தி வருகிறாா். இதனால் மாணவா்களும், பெற்றோா்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.