வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் இரவு நேரத்தில் கூட்டமாக நுழைந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை சேதப்படுத்தின.
வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சமீப காலமாக யனைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் யானைகள் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக முகாமிட்டுள்ள யானைகள் கடந்த 20 நாள்களாக இரவு நேரத்தில் அங்குள்ள குடியிருப்பு, ரேஷன் கடைகளை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கருமலை எஸ்டேட் ரேஷன் கடை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை இரவு கூட்டமாக நுழைந்த யானைகள் கடையின் சுவா்களை முட்டித் தள்ளி உள்ளே இருந்த பொருள்களை இழுத்துப் போட்டு சேதப்படுத்தின.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பல மணி நேரம் போராடி யானைகளை அப்பகுதியை விட்டு விரட்டினா்.