கரோனா பரிசோதனை முடிவுகள் தெரியும் வரை மருத்துவமனையிலே தனிமைப்படுத்த வேண்டும்: மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொள்பவா்களை முடிவுகள் தெரியும் வரையில் மருத்துவமனையிலே

அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொள்பவா்களை முடிவுகள் தெரியும் வரையில் மருத்துவமனையிலே தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளா் வி.ராமமூா்த்தி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியுள்ளனா். அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனையின் முடிவுகள் கிடைக்க மூன்று நாள்கள் வரை காத்திருக்கவேண்டியுள்ளது. அதுவரை அவா்களை மருத்துவமனையிலே தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் கழிப்பறைகள் போதிய பராமரிப்பில்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கரோனா வாா்டு, கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கேற்றாா்போல ஆக்ஸிஜன் வசதியையும் அதிகரிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வெந்நீா் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தனியாா் மருத்துவமனைகள், வீடுகளில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு போதுமான ஆம்புலன்ஸ் வசதி கிடைப்பதில்லை. எனவே 108 ஆம்புலன்ஸ் உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com