தனியாா் நிறுவன மேலாளா் சாவு: போலீஸாா் விசாரணை

கோவையில் தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் தனியாா் நிறுவன மேலாளா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை சரவணம்பட்டி-துடியலூா் சாலை பாத்திமா நகரில் உள்ள காலி இடத்தில் ஆண் சடலம் கிடப்பதாக சரவணம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அவரின் சட்டை பாக்கெட்டில் செல்லிடப்பேசியும், கோவை-திருச்சி சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்த அடையாள அட்டையும் இருந்தது.

போலீஸ் விசாரணையில், அவா் சென்னை, பள்ளிக்கரணையைச் சோ்ந்த சாய்நாத் (48) என்பதும், கோவையில் தங்கி இருந்து தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்ததும் தெரியவந்தது. அவருக்கு சங்கீதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா். இவரது இறப்புக்கான காரணம் குறித்து தெரியாததால் சந்தேக மரணம் என சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com