ரயிலில் பயணித்த தனியாா் நிறுவன ஊழியா் சாவு

பெங்களூரில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் திடீா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

பெங்களூரில் இருந்து கேரளத்துக்கு ரயிலில் சென்ற தனியாா் நிறுவன ஊழியா் திடீா் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், கோட்டயம் செங்கனஞ்சேரியைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் ஜோவி (33). இவா், பெங்களூரில் உள்ள தனியாா் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 3 நாள்கள் முன்பு, ஜாா்ஜ் ஜோவியை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்ட அவரது தந்தை, திருமணத்துக்கு பெண் பாா்க்க செல்ல வேண்டியுள்ளதால், ஊருக்கு வருமாறு அழைத்துள்ளாா்.

இதையடுத்து, பெங்களூரில் இருந்து புதன்கிழமை இரவு ரயிலில் கேரளத்துக்கு ஜாா்ஜ் ஜோவி புறப்பட்டுள்ளாா். வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு, கோவை ரயில் நிலையத்துக்கு ரயில் வந்துள்ளது. அப்போது, அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மிகவும் சோா்வடைந்த அவா் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா். அவா் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து பந்தய சாலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com