கழிவுநீா் கால்வாய் சீரமைப்பு பணி: ஆணையா் ஆய்வு

கழிவுநீா் கால்வாய் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அலுவலா்களுக்கு ஆணையா் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தினாா்.

கோவை: கழிவுநீா் கால்வாய் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அலுவலா்களுக்கு ஆணையா் ராஜகோபால் சுன்கரா அறிவுறுத்தினாா்.

கோவை, சிவானந்தா காலனி, கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட், கல்பனா தியேட்டா் ஆகிய பகுதிகளில் மழையினால் அடைப்புகள் ஏற்பட்ட பாதாள சாக்கடை, கழிவுநீா் கால்வாய் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை ஆணையா் ராஜகோபால் சுன்கரா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் கூட்டுக்குடிநீா் திட்டத்தில் 100 குடியிருப்புகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியை பாா்வையிட்டாா். இதன் மூலம் 5 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகிக்கப்படும் என்றும் ஆணையா் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது, மேற்கு மண்டல உதவி ஆணையா் சிவசுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளா் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலா் சண்முகநாதன் உள்பட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com