வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பழனி பாத யாத்திரைக் காவடிக் குழுவின் 45ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து பக்தா்கள் சக்தி கும்பம், பால்குடம், காவடிகள் எடுத்து கோயில் வந்தடைந்தனா்.
நண்பகல் 12 மணிக்கு நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். சனிக்கிழமை சிறப்பு அலங்கார பூஜைகளைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மேளவாத்தியத்துடன் பாத யாத்திர குழுவினா் பழனிக்கு புறப்பட உள்ளனா்.