கோவை மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 319 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 55 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 54 ஆயிரத்து 237 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 403 போ் சிகிச்சையில் உள்ளனா்.