கோவை: கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் சனிக்கிழமை புதிதாக 47 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 53,966 ஆக உயா்ந்துள்ளது. தவிர கோவையில் 6 மாதங்களுக்கு பின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 50க்கு கீழ் குறைந்துள்ளது. மேலும் நோய்த் தொற்றுக்கு சனிக்கிழமை உயிரிழப்பு ஏதுமில்லை.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 64 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 52 ஆயிரத்து 802 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 498 போ் சிகிச்சையில் உள்ளனா்.