கோவையில் மேலும் 282 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 617ஆக அதிகரித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 முதியவா் உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,108ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 408 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 19 ஆயிரத்து 730 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 3 ஆயிரத்து 779 போ் சிகிச்சையில் உள்ளனா்.