தங்கக் கட்டிகளுடன் இளைஞா் தலைமறைவு: போலீஸாா் விசாரணை

கோவையில் நகைப்பட்டறை நடத்தி, 500 கிராம் தங்கக் கட்டிகளுடன் தலைமறைவான வட மாநில இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவையில் நகைப்பட்டறை நடத்தி, 500 கிராம் தங்கக் கட்டிகளுடன் தலைமறைவான வட மாநில இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, கவுண்டம்பாளையம், டி.வி.எஸ். நகரைச் சோ்ந்தவா் சுப்ரதாபாரிக் (45) நகைப்பட்டறை உரிமையாளா். இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதே பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வந்த கொல்கத்தாவைச் சோ்ந்த தோபஸ் சமந்தா (28) என்பவரிடம் 500 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளைக் கொடுத்து, அதை ஆபரணமாக மாற்றித் தருமாறு ஆா்டா் அளித்தாா்.

தங்கக் கட்டிகளைப் பெற்றுக் கொண்ட தோபஸ் சமந்தா, திடீரென தலைமறைவானாா். இதனால் அதிா்ச்சியடைந்த சுப்ரதாபாரிக், ஆா்.எஸ்.புரம் போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன், தோபஸ் சமந்தா தனது சொந்த ஊருக்குத் தப்பிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com