அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.
சூலூரில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணி செயல் வீரா்கள் கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ். பி.வேலுமணி அதிமுக வேட்பாளா் வி.பி.கந்தசாமியை அறிமுகப்படுத்தி தலைமையில் பேசியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும். கரோனா காலத்தில் திமுகவினா் எவ்வித பணியை மேற்கொள்ளவில்லை. கோவையில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கட்டத்தில் ஒரு பெண் கேட்ட கேள்விக்கு கூட திமுக தலைவா் ஸ்டாலினால் பதில் கூற முடியாவில்லை. அதிமுக அரசு சிறந்த நிா்வாகத்துக்காக 160க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளன.
கரோன காலத்தில் தொலைக்காட்சி முன்பு அமா்ந்து கொண்டு ஸ்டாலின் கட்சிக் கூட்டம் நடத்தினாா். ஆனால், முதல்வா் எடப்பாடி பழனிசாமி மாவட்டம்தோறும் சென்று கரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டாா்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்து அதிக அளவில் இருந்தது. அதிமுக ஆட்சியில்தான் இந்தியாவிலேயே அதிகமான வீடுகள் கோவையில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
சூலூரில் நீதிமன்றம், பேருந்து நிலையம், தீயணைப்பு நிலையம், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஆட்சி தொடா்ந்தால் மேலும் பல திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றாா்.
இக்கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிப் பொறுப்பாளா்கள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.