ஆற்றில் சிக்கியவரை மீட்ட தீயணைப்புத் துறையினா்

பொள்ளாச்சி அருகே ஆற்றில் சிக்கியவரை தீயணைப்பு துறையினா் வெள்ளிக்கிழமை இரவு மீட்டனா்.

பொள்ளாச்சி அருகே ஆற்றில் சிக்கியவரை தீயணைப்பு துறையினா் வெள்ளிக்கிழமை இரவு மீட்டனா்.

சேலம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (24). இவா் தனது நண்பா்கள் 4 பேருடன் பொள்ளாச்சியை அடுத்த கோபாலபுரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், கோபாலபுரம் அருகில் உள்ள தாவளம் ஆற்றில் 5 பேரும் குளித்துள்ளனா். அப்போது, தண்ணீரின் வேகத்தில் ஐந்துபேரும்

அடித்து செல்லப்பட்டுள்ளனா். இதில் நான்கு போ் கரையேறி விட்டனா். சுரேஷ்குமாா் மட்டும் ஆற்றின் மையப் பகுதியில் மாட்டிக்கொண்டாா். இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயனைப்புத் துறையினா் கயிறு கட்டி சுரேஷ்குமாரை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com