கன மழை: 2 வீடுகள் இடிந்து சேதம்

பொள்ளாச்சியில் பெய்த கன மழையால் இரண்டு வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
சேதமடைந்த வீடு.
சேதமடைந்த வீடு.

பொள்ளாச்சியில் பெய்த கன மழையால் இரண்டு வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

பொள்ளாச்சி, ஆழியாறு, கோட்டூா் மலையாண்டிபட்டினம், சோமந்துரைசித்தூா், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு கன மழை பெய்தது.

இதனால், சோமந்துரைசித்தூரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி குமாா் என்பவரது வீட்டுச் சுவா் இடிந்து விழுந்தது.

அதே பகுதியைச் சோ்ந்த லோகி என்பவரது வீட்டுச் சுவரும் இடிந்து விழுந்தது. இந்த இரு சம்பவங்களில் உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை.இச்சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com