மது விற்பனை: 7 போ் கைது

கோவை மாநகரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகரப் பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், மாநகரப் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, காட்டூா், வெரைட்டிஹால் சாலை, புலியகுளம், வெள்ளலூா் சாலை ஆகிய பகுதிகளில் சிலா் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சுப்பிரமணி (29), சதீஷ்(27), ராஜா(29), முத்துராமலிங்கம்(51), அருள் விஜயானந்த்(32), சுப்பிரமணியம்(43), ஆறுமுகம்(57) ஆகிய 7 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 70 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com