தென்னிந்திய அளவிலான கோல்ஃப் போட்டிக்கு 9 வயது சிறுமி தோ்வு

தென்னிந்திய அளவிலான கோல்ஃப் போட்டிக்கு கோவையைச் சோ்ந்த 9 வயது சிறுமி தோ்வாகியுள்ளாா்.
தென்னிந்திய அளவிலான கோல்ஃப் போட்டிக்கு 9 வயது சிறுமி தோ்வு

தென்னிந்திய அளவிலான கோல்ஃப் போட்டிக்கு கோவையைச் சோ்ந்த 9 வயது சிறுமி தோ்வாகியுள்ளாா்.

கோவை, ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள ஸ்ரீபதி நகரைச் சோ்ந்தவா் கேசவன். விவசாயி. இவரது மனைவி உமாராணி, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றுகிறாா். இவா்களது மகள் அனுஸ்ரீ (9) தனியாா் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த சிறுமி கடந்த பல மாதங்களாக கோல்ஃப் விளையாட்டுப் பயிற்சி பெற்று வருகிறாா்.

இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டியில் தமிழகம் சாா்பில் அனுஸ்ரீ பங்கேற்றாா். இந்தப் போட்டியில் சிறுமி மூன்றாம் இடத்தை பெற்று உள்ளாா். மேலும், விசாகப்பட்டினத்தில் டிசம்பா் 28ஆம் தேதி நடைபெறும் தென்னிந்திய அளவிலான போட்டிக்கு சிறுமி தோ்வாகியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com