பேருந்தில் பெண்ணிடம் இருந்து 4 பவுன் நகையைப் பறித்து சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, வேலாண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் ராமேஸ்வரி (50). தூய்மைப் பணியாளா். இவா், ஆா்.எஸ்.புரம் என்எஸ்ஆா் சாலையில் உள்ள கடைக்குச் செல்வதற்காக தனியாா் பேருந்தில் ஏறிச் சென்றாா். கூட்ட நெரிசலில் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் ராமேஸ்வரி அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்துச் சென்றாா். இது குறித்து ராமேஸ்வரி அளித்தப் புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.