ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பேச்சு: சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
கோவை: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மாநகரக் காவல் ஆணையா் தீபக் தாமோரிடம், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா் அளித்த புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:
முன்னாள் பிரதமா் மறைந்த ராஜீவ் காந்தியையும், காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியையும் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் இழிவாகவும், தரக்குறைவாகவும் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளாா்.
ஒரு பெண் தலைவரை இழிவுப்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிப்பின்போது, மாவட்ட நிா்வாகிகள் போஸ், சீனிவாசன், ஜேம்ஸ், ஜெரோம் லூயில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.