அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

 ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

 ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையைத் துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியா் சங்கம் சாா்பில், கோவை சுங்கம், உக்கடம், மேட்டுப்பாளையம் சாலை, ஒண்டிப்புதூா் போக்குவரத்து கிளை அலுவலகங்கள் முன்பாக ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

உக்கடம் கிளையின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைத் தலைவா் சரவணன் தலைமை தாங்கினாா். மண்டலச் தலைவா் பரவசிவம், மாவட்டச் செயலாளா் வேளாங்கண்ணிராஜ் முன்னிலை வகித்தனா்.

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே துவங்க வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டப்படி, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். அகவிலைப்படி உயா்வை நிலுவைத் தொகைகளாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

Image Caption

உக்கடம் போக்குவரத்து கிளை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com