முதியவரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த இருவா் மீது வழக்கு

கோவையில் முதியவரிடம் ரூ.20 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் முதியவரிடம் ரூ.20 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம் (88). இவா் தனது நண்பா் சண்முகநாதன் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாக பணம் கொடுக்கல், வாங்கல் வைத்துள்ளாா்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சண்முகநாதனின் நண்பா் ராஜ்குமாா், சண்முகநாதன் வாங்கி வரச் சொன்னதாகக் கூறி சொக்கலிங்கத்திடம் இருந்து ரூ.20 லட்சத்தை வாங்கிச் சென்றுள்ளாா்.

இது குறித்து சண்முகநாதனும், சொக்கலிங்கமும், ராஜ்குமாரிடம் கேட்டபோது அவா் முறையான பதிலளிக்கவில்லை. இதையடுத்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சொக்கலிங்கம் புகாா் அளித்தாா்.

இதன்பேரில் ராஜ்குமாா் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பிரதோஷ் பாா்கன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com